பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என அறிய உதவும் அறிவியல் தொடர்.

சென்ற பதிவின் தொடர்ச்சி............

அம்மாதிரியான கட்டளைப்படி செயல்படும் ஒரு உயிரினத்தின் இனப் பெருக்கச் செயல்பாட்டை தனது கவிதையின் இடையில் செருகி காதலியை வர்ணிக்கும் வைரமுத்துவின் பாடலொன்றைப் பார்ப்போம்.

”விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே”

என்று ஆரம்பித்து

"நீ பட்டுப் புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும்"

என்று பாடிச்செல்வார்.

பட்டுப் பூச்சிகள் எப்படி மோட்சம் பெறும். இதற்கான விளக்கம் தெரிந்தால்தான் புலவனின் கவிதை நுட்பம் நமக்குப் புரியும்.

பட்டுப்பூச்சி (வண்ணத்துப் பூச்சி அல்ல) தனது நூற்றுக்கணக்கான முட்டைகளை முசுக் கொட்டை செடியின் இலையில் இட்டுவிட்டுச் சென்றுவிடும்.



சூரிய வெப்பத்தில் முட்டையிலிருந்து புழுக்கள் வெளிவந்து அந்த இலைகளையே அசுரப் பசியோடு தின்று,அசுரத்தோற்றம் அடைந்து விடுகிறது. ஆமாம் சுமார் 100 மடங்கு வளர்ந்து விடுகிறது.



தேவையான அளவுக்கு வளர்ந்தவுடன் தான் தின்று சேமித்து வைத்த சத்துக்களால் ஒருவித நூலை தயார் செய்து, தனக்குத்தானே சுழன்று, சுழன்று தன்னைச் சுற்றி ஒரு நூலால் ஆகிய கூட்டை உருவாக்கிக் கொண்டு, அந்தக் கூட்டுக்குள் தனது கூட்டுப்புழு பருவத்தை பாதுகாப்பாக கழித்துவிடுகிறது.

கூட்டை குறுக்கே வெட்டிய்தால் ஏற்பட்ட பிரிவுகள்.



தனக்குத் தேவையான சிறகுகள் வளர்ந்து பூச்சியாக மாறியவுடன் (அந்த நூலின் மகத்துவம் தெரியாமல்!!!), சுதந்திரமே பெரிதென கூட்டை கடித்து வெட்டியெறிந்துவிட்டு சுதந்திரப் பூச்சியாக பறந்துவிடுகிறது. ஒரு கெட்டியான நூலினால் ஒரு கூடு செய்து தனது பாதுகாப்பை தேடிக் கொள்ளும் அறிவு புழுவாய் இருக்கும் பொழுது எப்படி வந்தது. அறிவு வரவில்லை, அது பயாஸில் (BIOS) உள்ள விஷயம்.

தனது இனப் பெருக்கத்திற்கான பாதுகாப்பான வழியாக இதைத் தேர்ந்தெடுத்து செய்து வருகிறது. இது ஓரிரவுக்குள் செய்த ஏற்பாடன்று. பல்லாயிரக் கணக்கான வருடங்களாக செய்த சோதனைத் தோல்விகளுக்குப் பின் மெருகூட்டப் பட்ட விந்தையான வித்தை இது. இன்றும் வாழ்கிறது, வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் மனிதன், அப்புழு, பூச்சியாக மாறி கூட்டைக் கடித்து நூலை சேதப் படுத்தி வெளியேறும் தறுவாயில் அந்தக் கூட்டை வெண்ணீரில் போட்டு பூச்சியைக் கொன்று நூலைச் சேதமில்லாமல் எடுக்கிறான். அது போன்ற நூற்றுக்கணக்கான புழுக்களை கொன்று அந்த நூற்களை எடுத்து பட்டுச் சேலை செய்து பெண்களுக்கு தருகிறான்.அப்படி உருவான சேலையைக் கட்டிய காதலியைப் பற்றிய வர்ணனைப் பாடல்தான் இது.

கொலை அல்லது தற்கொலை செய்யப் பட்ட உயிர்கள் மோட்சம் அடையாது என்பதும், கொலைக்கு காரணமானவர்களை, கொலை செய்யப்பட்ட உயிர்கள் பழிதீர்க்க இப்பூவுலகில் அலையும் என்பதும் மனிதனை நெறிப் படுத்த ஏற்பட்ட வழக்கு. ஏனென்றால் அப்படியாவது கொலை செய்யப் பயப்படுவானா என்றுதான.(அதெல்லாம் கிடையாது,இவை எல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்லி கொலைக்கு வக்காலத்து வாங்கும் சமூக அக்கறை இல்லாதவன் அல்ல !! )

அவ்வாறு அலையும் பட்டுப் புழுவின் உயிர்கள், தனது கொலைக்கு காரனமான வெண்ணீரில் போட்டவன்,பட்டுச் சேலை நெய்தவன், மற்றும் அந்த பட்டு நூலால் நெய்யப்பட்ட சேலையைக் கட்டியிருக்கும் பெண் ஆகியோரைத் தேடி அலையுமாம். அவ்வாறு அலையும் போது அந்த நூலால் நெய்யப்பட்ட சேலையை அணிந்த இந்தப் பெண்ணைக் கண்டவுடன், ஆஹா இவ்வளவு அழகான பெண்ணுக்காகத்தான் நாம் கொலை செய்யப்பட்டோமா என அறிந்து, இந்த பெண்ணுக்காக என்றால் இன்னும் பத்து உயிர்களைக் கூட கொடுக்கலாம் என எண்ணி எல்லோரையும் மன்னித்து விடுவதால் அவைகள் மோட்சம் பெறுகிறதாம்.

இந்த சேலைக்காக கொலை செய்யப் ப்ட்ட உயிர்களுக்கு மோட்சம் நிச்சயம்


ஆகா என்ன அழகான கற்பனை. கவிஞன் ஒற்றை வரியில் பட்டுநூல் தயாரிக்கும் நுட்பத்தை வைத்து பெண்ணின் அழகைச் சொல்லிவிட்டான்.

இதுமட்டுமா?

”வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்”



ஆமாம் அந்த ஒவியங்களை நீங்கள் உற்றுப் பார்த்தது உண்டா? உற்றுப் பார்த்திருந்தால் இந்த வரியில் உள்ள பேரதிசயம் புரியும்.

ஆமாம் அந்த ஒவியங்கள் எல்லாம் ஒன்றை குறிப்பிடுவதை காணலாம். அவைகள் இரண்டு கண்கள் பெரிதாக உள்ள ஒரு கோரமூஞ்சியையும், பூக்களையும், சருகுகளையும் நினைவு படுத்துவதைக் காணலாம். பெரும்பாலும் கோரமூஞ்சிகள் அவைகளின் தீவிர எதிரியான பறவைகளில், கழுகு அல்லது ஆந்தை முகத்தை நினைவுபடுத்தும். ஏனென்றால் அப்பறவைகளின் வாயிலிருக்கும் போது அவைகளின் கண்களைக் கண்டு பயந்து, அதிர்ஷ்டவசமாக தப்பித்ததால், சாவின் விளிம்பில், கண்ணுக்கு தெரிந்த குளோசப் காட்சி, நெஞ்சில் நின்று கருவிலும் பதிந்து விட்டதோ.அதையே தனது இறகுகளில் வரைந்து கொண்டு பிற ஊணுன்னிகளிடமிருந்து தப்பிக்கிறது.கண்ணால் கண்டதை நினைவில் வைத்து சாயக் கலவை, தூரிகை, இல்லாமல் தனது இறக்கையில் ஓவியம் வரைவது அதிசயம் தானே.



இது மட்டுமா உடம்பின் வண்ணத்தை சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ளும் உயிரிகளும்(பச்சோந்தி) உண்டு. இதில் கில்லாடி ஆக்டபஸ்தான். அது வண்ணத்தை மட்டுமல்ல உருவத்தையே விதம் விதமாக மாற்றி கொள்ளும் பிரானி.

”பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம்”.

புலவர் ஒருவேளை வாழைப் பூவை பார்த்து பாடியிருப்பார். எனக்கு கனிக்கூட்டமல்ல, மரக் கூட்டமே தெரிகிறது உங்களுக்கு?

இவ்வாறு தங்களுக்குள் பிறவியிலே தங்களது முன்னோர்களின் சூழ்நிலையினாலும், தேவைகளாலும், விருப்பத்தினாலும், ஒவ்வொரு தலைமுறையினாலும், உயிருடன் நிலைத்து வாழ செய்யப்பட்ட சிற்சிறு மாற்றங்களுடன் ஏற்றப்பட்ட கட்டளைப் (Traits) படி செய்கின்றன. இதில் சொந்த அறிவு என்பது மிகவும் குறைவு எனவும் நிரூபித்துள்ளனர்.

உதாரனமாக குளவிகளின் இனப்பெருக்கத்தைப் பார்த்தோம் என்றால் இது தெளிவாகப் புரியும். அவைகள் நல்ல ஆரோக்கியமான புழுக்களை தேடி, அவற்றை தனது கொடுக்கினால் கொட்டி,கொட்டி அதாவது அவற்றின் உடம்பில் முதலில் ஒரு திரவத்தை செலுத்தி அவை நீண்ட நாளைக்கு கெட்டுப் போகாதாவாறு செய்து பின் தனது முட்டையை அதன் உடலுக்குள் செலுத்தி விடுகிறது.

இதைக் கண்ணுற்ற தமிழன் ஒரு பழமொழியை உருவாக்கியுள்ளான் அதாவது, “கொட்டி கொட்டி குளவியாக மாற்றிய கதை”என்பான். அதாவது ஏதோ ஒரு புழுவை எடுத்து ”கொட்டி கொட்டி வளர்த்து” தனது இனமாக மாற்றிவிடுமாம். உயிரியலுக்கு முரண்பாடான கதை வெகுநாட்களாக உண்மை என நம்பபட்டு வருகிறது.

அந்த புழுவை எடுத்து ஒரு பத்திரமான இடத்தில், ஒரு பொந்தில் (வீட்டில் உபயோகத்தில் இல்லாத மின் இணைப்பிற்கான பிளக்கில் உள்ள துவாரத்தில்) வைத்து அதைச் சுற்றி ஒரு கான்கீரீட் போன்ற களிமண் கூட்டை கட்டி வைத்து விடுகிறது. அந்த கூடுகட்ட களிமண் தேடி எடுத்து பலமுறை கூட்டிற்கு வருகை தந்து, தனது உமிழ்நீரில் கலந்து கட்டுவதைத் தான் ”கொட்டி கொட்டி வளர்ப்பதாக” நினைத்துக் கொள்கிறான்.

ஆகவே அந்தக் கூட்டில் தனது சந்ததி சர்வ நிச்சயமாக உயிர் பிழைத்து வாழும் என்ற நம்பிக்கையோடு தன் கடமை முடிந்து விட்டதாக எண்ணிச் சென்று விடுகிறது. அதனது முட்டை அந்த புழுவின் உடம்பிற்குள் பொரிந்து அந்த புழுவை உண்டு, புழு பருவத்திலிருந்து கூட்டுப் புழு பருவத்திற்கு மாறிவிடுகிறது. பின் இறக்கைகள் முளைத்து குளவியாக மாறி கான்கிரீட் பலமுள்ள அந்த கூட்டை தனது பற்களால் கடித்து உடைத்துவிட்டு வெளியேறி விடுகிறது. இந்த முறையில்தான் அவைகளும் பன்னெடுங் காலமாக பூமியில் நிலைத்து இருக்கின்றன.

சிலர் அதை தவறாகப் புரிந்து கொண்டு ஏதோ ஒரு புழுவை எடுத்து வந்து, கொட்டிக் கொட்டி குளவியாக மாற்றிவிடுவதாகத் தான் இன்னும் நினைத்துக் கொடிருக்கின்றனர்.இதற்குத்தான் கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய் தீர ஆராய்ந்து அறிவதே மெய் என்றார்கள்.

இப்பொழுது இந்த களிமண் கூட்டை உடைத்து வெளியேறும் முன்பாக, அந்தக் கூட்டை அடுத்து ஒரு மெல்லிய தாளினால் ஆன குப்பியை வைத்துப் பார்த்தனர். அவ்வளவு பலமுள்ள களிமண் கூட்டை கடித்து வெளியேறிய குளவிக்கு அந்த மெல்லியதாளை கடித்து வெளிவரமுடியாமல் இறந்து விட்டது.ஏனென்றால் அது முயற்சிக்க வில்லை. காரணம் அதற்கான அடிப்படை கட்டளைகளில் (BIOS) அதனுடைய பயாஸில், மெல்லிய தாளினால் ஆன குப்பியைப் பற்றிய செய்தி அதற்கு சொல்லப் படவில்லை. ஏதோ ஒரு வகையில் அந்தத் தாளை தெரியாமல் மோதலில் கிழித்து வெளியேறினால் அது கட்டளையாக அடுத்த தலைமுறைக்குப் பதியப் படும்.

ஆகவே இடர்ப்பாடுகளை சந்தித்து மீண்டு, உயிர் வாழ்ந்தால்தான் அதைப் பற்றிய பதிவும், பாதுகாப்பு பற்றிய தேவையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படும். வண்ணத்துப் பூச்சி தான் கண்டு பயந்த பறவைகளின் கண்களை பற்றிய தகவல் சொல்ல உயிருடன் தப்பித்து பின் கலவியில் ஈடுபட்டு, கண்களை பற்றிய தகவலை கருவில் ஏற்றியிருக்க வேண்டும்.

ஆகவே வாழ்க்கையில் சவால்களை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் ”அடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரணதேவி” என்ற வசனம் சத்தியமாக குலம் தழைக்க உதவாது என்பது இதன் மூலம் தெரிகிறது., ஏன அடைய முடியவில்லை என்பதை வாரிசுகளுக்கு சொன்னால்தானே மாற்று வழி பிறக்கும். ஆகவே திருமணத்திற்கு முன் சவால்களை சந்தித்து தெளிவடைந்து கொள்ளுங்கள். சவாலகளை சந்திக்காவிட்டாலும் பரவாயில்லை உலகத்தை சுற்றிப் பாருங்கள் அல்லது படியுங்கள். நீங்கள் சந்திக்கும் தீர்க்க முடியாத சவால்களுக்கு தீர்வு உங்கள் வாரிசுகளிடம் ஏற்றப்படும்.
தொடரும்.................


முந்தைய பதிவு

21 comments:

இந்துமதி.சி.பா said...

/// சவாலகளை சந்திக்காவிட்டாலும் பரவாயில்லை உலகத்தை சுற்றிப் பாருங்கள் அல்லது படியுங்கள். நீங்கள் சந்திக்கும் தீர்க்க முடியாத சவால்களுக்கு தீர்வு உங்கள் வாரிசுகளிடம் ஏற்றப்படும் ///

அருமை.

Arun said...

மதிநுட்பமான தகவலை மிக எளிய சரள தமிழில் எழுத்தாளர் சுஜாதாவை போல் பதிந்துள்ளீர்கள். அடுத்த பாகம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்கிறேன். நன்றி...

MANI said...

நாம் கவிதை வரிகளை தான் ரசித்தோம் ஆனால் நீங்கள் அதன் விளக்கங்களை மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள். இறுதியாக நீங்கள் கூறியுள்ள விளக்கம் அனைவருக்கும் மிகுந்த உபயோகமாக இருக்கும். நன்றி.

Unknown said...

திருவள்ளுவருக்கு ஒரு பரிமேழலகர் வைரமுத்துவுக்கு ஒரு சந்திரசேகரரா?

Unknown said...

இது தமிழ்க்கவிதைத் தொட்ரா அல்லது அறிவியல் தொடரா?

Unknown said...

மாம்ஸ் ஏதாவது பட்டுப் புழு பண்ணை வைத்திருக்கிறீர்களா?

Unknown said...

”அட்டன் பர்ரோ” மாதிரி போட்டோக்களுடன் விளக்கித் தள்ளியிருக்கிறீர்கள்.

Unknown said...

அந்தகழுகும் ஆந்தையும் சரி, அதற்குத் தோதா வண்ணத்துப் பூச்சி என்ன கிராபிக்ஸா(உங்களுக்குத் தான் கிராபிக்ஸ் கை வந்த கலையாயிற்றே)

Unknown said...

அந்த குளவிக்குப் படம் ஏதும் கிடைக்கவில்லையா?

Unknown said...

உங்களின் கூற்றுப்படி இன்னும் கொஞ்சம் வருடங்களில் புழு, உள்ளே கக்கூஸ் எல்லாம் கட்டிக் கொள்ளும் போல் இருக்கிறது.

Unknown said...

பிறக்கப் போகு குழந்த்தை ஆணா, பெண்ணா It is too late.....

Unknown said...

ஏன் மாம்ஸ் நான் லவ் பண்ணி கல்யாணம் செய்யாத பெண்ணை, என் மகன் கல்யாணம் செய்து விடுவானா?

Unknown said...

மொத்தத்தில் ”கலக்குறே சந்துரு”

Unknown said...

கவிதையின் விளக்கம் அருமை.
பயாஸ் என்று கம்ப்யூட்டர் மொழிச்சொல்லை அடிக்கடி பயன் படுத்துகிறீர்கள்,உண்மையிலே அதன் தெளிவான விளக்கத்தை உங்கள் பாணியில் விளக்கிச் சொல்லுங்கள்.

Chandru said...

விஜயராகவனின் வருகைக்கும்,பாராட்டுக்கும் லொள்ளுக்கும் நன்றி.

Chandru said...

சதாசிவம், வருகைக்கும், வேண்டுகோளுக்கும் நன்றி. அடுத்த பதிவில் சொல்கிறேன்

ஜோதிஜி said...

தெகா பதிவில் வெளுத்து வாங்கி இருக்கீங்க. உள்ளே வந்தால் கருப்பு கண் கூசுதே? கொஞ்சம் நிறத்தை மாத்துங்க சாமி

Chandru said...

ஜோதிஜி திருப்பூர்
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. //உள்ளே வந்தால் கருப்பு கண் கூசுதே? கொஞ்சம் நிறத்தை மாத்துங்க சாமி// கறுப்பு கண் கூசுமா? எனது முந்தைய பதிவில் பதில் உள்ளது. http://chandroosblog.blogspot.com/2010/05/blog-post.html

Dr.Dolittle said...

சிறப்பா இருக்கு சார்

Chandru said...

Dr.Dolittle

தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

Unknown said...

//கொலை அல்லது தற்கொலை செய்யப் பட்ட உயிர்கள் மோட்சம் அடையாது என்பதும், கொலைக்கு காரணமானவர்களை, கொலை செய்யப்பட்ட உயிர்கள் பழிதீர்க்க இப்பூவுலகில் அலையும் என்பதும் மனிதனை நெறிப் படுத்த ஏற்பட்ட வழக்கு. ஏனென்றால் அப்படியாவது கொலை செய்யப் பயப்படுவானா என்றுதான.(அதெல்லாம் கிடையாது,இவை எல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்லி கொலைக்கு வக்காலத்து வாங்கும் சமூக அக்கறை இல்லாதவன் அல்ல !! )//


இதை முதல்ல கடவுள் பக்தி கொண்டவர்கள் பயபக்தியோடு தவறு செய்யாம இருக்காங்களா?


மேலும் கடவுள் என்ற பெயரில்தானய்யா சமூக சீரழிவுகள் ஏராளமாய் நடக்குது!?




மேலும் பாதிக்கபட்டவர்களை (கொலை செய்யபட்டவரின் உறவினர்கள் உட்பட) அடிமைபோல் கிட. எல்லாம் அவன் செயல் என்றும் அனைத்தும் விதிப்படி நடக்கிறதென்றும் ஏற்றுகொள்ள வைப்பதா சமூக அக்கறை!?



(அறிவியலில் ஆன்மீகம் ஏன்!?)

top